கடலை மாசுபடுத்தும் நாடுகளில் சிறிலங்காவுக்கு ஐந்தாவது இடம்
உலகில் கடலை மோசமாக மாசுபடுத்தும் நாடுகளில் சிறிலங்காவும் இடம்பிடித்துள்ளது. இன்ரநசனல் பிஸ்னஸ் ரைம்ஸ் இதழினால், மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்விலேயே, சிறிலங்காவும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஏனைய ஆசிய நாடுகளுடன், சிறிலங்கா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
கடலை மிக மோசமாக மாசுபடுத்தும் நாடுகளில் முதலிடத்தில் சீனா உள்ளது. அதையடுத்து, இந்தோனேசியா பிலிப்பைன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகள் உள்ளன.
சிறிலங்கா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. சிறிலங்காவில் நாளொன்றுக்கு நபர் ஒருவரால், 5.1 கிலோ கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதில் 299 கிராம் பிளாஸ்டிக் கழிவுகளும் அடங்கியுள்ளன.
கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் ஆண்டு தோறும், ஆயிரக்கணக்கான கடற்பறவைகள், கடல் ஆமைகள், கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.