வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் சம்பந்தன் சந்திப்பு
யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று பிற்பகல் வடக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார்.
வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 23 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
எனினும், முதலமைச்சர் விக்னேஸ்வரன், இரண்டு அமைச்சர்கள் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை.
இன்றைய சந்திப்பில், வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுத்தல், வடக்கு மாகாண அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெறுமனே பேசினார் என்பதே ஒரு செய்தி அதற்கு 2 படங்கள். இதுதானா புதினம்?