மேலும்

சிறிலங்கா கடற்படையின் குற்றச்செயல்களை அம்பலப்படுத்தும், முன்னாள் புலனாய்வு அதிகாரி

sl-navyசிறிலங்கா கடற்படையினரின் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்த, கடற்படையின் முன்னாள் மூத்த புலனாய்வு அதிகாரி தயாராக இருப்பதாக, சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை, மற்றும் 11 பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் உள்ளிட்டவற்றில் இந்த புலனாய்வு அதிகாரி் முக்கிய சாட்சியாக உள்ளார்.

தற்போது வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள இந்த அதிகாரி, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு செய்மதித் தொழில்நுட்பம் மூலம் சாட்சியம் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இவர் சாட்சியமளிக்க முன்வந்ததையடுத்து,  உயர்மட்டக் கடற்படை அதிகாரிகளிடம் இருந்து இவர், கொலை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார்.

இதையடுத்தே அவர் வெளிநாட்டுக்குச் தப்பிச் சென்றார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *