இப்போதைக்கு இல்லை பான் கீ மூனின் சிறிலங்கா பயணம்
ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது அல்லது, அதற்குப் பின்னர், ஐ.நா பொதுச்செயலரும் சிறிலங்கா வருவார் என்று கடந்த ஆண்டு செய்திகள் வெளியாகியிருந்தன.
கடந்த பெப்ரவரி மாதம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
எனினும், ஐ.நா பொதுச்செயலர் பான் மூன் கூடிய விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் திட்டம் ஏதும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.