மேலும்

முதலமைச்சர்களின் மாநாட்டில் இருந்து நழுவினார் விக்கி

CM-WIGNESWARANஹிக்கடுவையில் நேற்று நடந்த மாகாண முதலமைச்சர்களின் 32 ஆவது மாநாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை.

மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்க்கும் வகையில், மாகாண முதலமைச்சர்களின் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

தென்மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் தலைமையில் நடந்த இந்த முதலமைச்சர்களின் மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

cm-confrence (1)cm-confrence (2)

இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாணங்களின் முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுவதாக சிறிலங்கா அதிபர் உறுதியளித்துள்ளார்.

மாகாண முதலமைச்சர்களின் மாநாடுகளையும், மாகாண முதலமைச்சர்கள் பங்கேற்கும் அமைச்சரவைக் கூட்டங்களையும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக தவிர்த்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *