நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பின்னரே துறைமுக நகரத் திட்டத்துக்கு அனுமதி
சில நிபந்தனைகளுக்கு இணங்கிய பின்னரே, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க, சீன நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று, சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த திட்டம் தொடர்பான சுற்றாடல் கரிசனைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
இந்த திட்டம் ஒருபோதும் ரத்துச் செய்யப்பட்டிருக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு இணங்கும் வரை தற்காலிகமாகவே இடைநிறுத்தப்பட்டது.
இந்த திட்டத்தினால் ஏற்படக் கூடிய சுற்றாடல் பாதிப்புகள் உள்ளிட்ட கவலைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.