நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அமைச்சரின் சகோதரர்
சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் தலைவரான தம்மிக ரணதுங்க இன்று கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில், ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
யோசித ராஜபக்சவுடன் கைது செய்யப்பட்ட சி.எஸ்.என் தொலைக்காட்சியின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியான நிசாந்த பீரிசின் பிணை மனு மீதான விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த வழக்கு விசாரணையைப் பார்வையிட, துறைமுக அதிகார சபைத் தலைவரான தம்மிக ரணதுங்கவும் நீதிமன்றம் வந்திருந்தார்.
அப்போது, அவரை ஊடகவியலாளர்கள் படம் பிடித்தனர், அதையடுத்தே ஊடகவியலாளர்களுக்கு அவர் கொலை அச்சுறுத்தல் விடுத்தார்.
தம்மிக பெர்னான்டோவின் சகோதரரரே நிசாந்த ரணதுங்க என்பதும், இவர்கள் இருவரும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.