முன்னாள் அமைச்சர் சுரனிமல ராஜபக்ச மரணம்
முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா பிரதமரின் இணைப்புச் செயலருமான சுரனிமல ராஜபக்ச இன்று காலை காலமானார். அவருக்கு வயது 67 ஆகும்.
1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான சுரனிமல ராஜபக்ச,2001ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை பாடசாலைக் கல்வி அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.
ஐதேகவின் தீவிர உறுப்பினரான இவர், கட்சியின் செயற்குழுவிலும் அங்கம் வகிக்கிறார். கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேகவுக்கான தீவிர பரப்புரைகளை அவர் மேற்கொண்டிருந்தார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் நாள் தொடக்கம் சுரனிமல ராஜபக்ச, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இணைப்புச் செயலராக பதவி வகித்து வந்தார்.