மேலும்

பேரணியில் பங்கேற்றால் மகிந்தவை கட்சியில் இருந்து நீக்க முடிவு

mahinda-maithriகூட்டு எதிர்க்கட்சியின் பேரணியில் பங்கேற்றால், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இடைநிறுத்த சிறிலங்கா அதிபரும், கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு ஹைட்பார்க்கில் வரும் 17ஆம் நாள், பசில் ராஜபக்சவின் ஏற்பாட்டில், கூட்டு எதிர்க்கட்சியின் பேரணி நடைபெறவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் பேரணிகளில் பங்கேற்பவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

இந்தநிலையிலேயே, இந்தப் பேரணியில், மகிந்த ராஜபக்ச பங்கேற்றால், அவரைக் கட்சியில் இருந்து இடைநிறுத்த மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக தேவையான அறிவுறுத்தல்களை கட்சியின் பொதுச்செயலாளரான துமிந்த சில்வாவுக்கு சிறிலங்கா அதிபர் வழங்கியுள்ளார்.

சந்திரிகா குமாரதுங்கவும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “பேரணியில் பங்கேற்றால் மகிந்தவை கட்சியில் இருந்து நீக்க முடிவு”

  1. மகேந்திரன் says:

    எந்தவொரு தீர்மானதையும் துணிந்து எடுக்கும் ஆற்றல் தலைவர்களுக்கு இருக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *