பாகிஸ்தான் அதிபர் சிறிலங்காவுக்கு திடீர் பயணம் – மைத்திரி, ரணிலை சந்திக்கிறார்
பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசேன் சிறிலங்காவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறுகிய நேரப் பயணமாகவே இவர் சிறிலங்கா வந்திருப்பதாகவும், அவரது பயணம் அதிகாரபூர்வமானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசேன் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அதிபரின் இந்தப் பயணம் முன்னரே திட்டமிட்ட ஒன்று அல்ல. எனினும், இந்த திடீர் பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.