இரண்டு ஆண்டுகளுக்குள் ஆட்சி கவிழும் – என்கிறார் பிரசன்ன ரணதுங்க
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் நிச்சயம் கவிழும் என்று தெரிவித்துள்ளார், மகிநத ராஜபக்ச ஆதரவு அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான பிரசன்ன ரணதுங்க.
மினுவாங்கொடவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,
“மினுவாங்கொட அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், மக்களுடனான தொடர்பு தொடரும். மகிந்த ராஜபக்சவுடனும் கூட்டு எதிரணியுடனும் இணைந்திருப்பேன்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் தற்போதைய அரசாங்கம் நிச்சயம் கவிழும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.