சம்பூர் கடற்படைத்தளம் விரைவில் இடம்மாற்றம் – நாடாளுமன்றில் அறிவிப்பு
திருகோணமலை, சம்பூரில் உள்ள விதுர கடற்படைத் தளம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என்று, நாடாளுமன்ற சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று தெரிவித்தார்.
சம்பூரில் உள்ள சிறிலங்கா கடற்படைத் தளங்களை வேறிடத்துக்கு மாற்றுவது தொடர்பாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“சம்பூரில் உள்ள விதுர கடற்படைத் தளம் முழுமையாக இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கில் உள்ள ஏனையசிறிலங்கா படை முகாம்களை இடமாற்றம் செய்வது குறித்தும், படிப்படியாக கலந்துரையாடி தீர்மானிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.