வன்னிப் படைகளின் தலைமையக தளபதியின் இடமாற்றம் திடீரென ரத்து
சிறிலங்கா இராணுவத்தின் வன்னிப் படைகளின் தலைமையக கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பெரேராவின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத் தளபதியால் கடந்த மாதம் 9ஆம் நாள் வெளியிடப்பட்ட மூத்த இராணுவ அதிகாரிகளின் இடமாற்ற அறிவிப்பில், வன்னிப் படைகளின் தலைமையக கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பெரேரா, இராணுவத் தலைமையகத்தில் பொது அதிகாரிகளுக்கான பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
எனினும், அவரது இந்த இடமாற்றம் தற்போது ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த முடிவுக்கான காரணம் வெளியிடப்படவில்லை.
அதேவேளை, இராணுவச் செயலராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, கடந்த மாதம் 28ஆம் நாள், யாழ். படைகளின் தலைமையகத்தின் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.