மேலும்

பீரகீத் கடத்தல் வழக்கில் மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரியும் கைது

prageeth eknaligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவரை நேற்று கைது செய்துள்ளனர்.

இந்த இராணுவ அதிகாரி கெக்கிராவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கிரித்தல இராணுவ முகாமில் பணியாற்றியவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட இந்த புலனாய்வு அதிகாரி நேற்று ஹோகம நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 89ஆம் நாள் விரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பாக, ஏற்கனவே ஆறு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *