மேலும்

இந்தியக் கடற்படையுடனான கூட்டுப் பயிற்சி – போர்க்கப்பலில் இருந்து பார்வையிட்ட பாதுகாப்புச்செயலர்

SLINEX-2015 (1)திருகோணமலையில் இந்திய – சிறிலங்கா கடற்படைகள் நடத்திய கூட்டுப் போர்ப் பயிற்சி நிறைவு நிகழ்வை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகள், போர்க்கப்பலில் இருந்து பார்வையிட்டனர்.

இந்திய- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில், ‘SLINEX’ என்ற பெயரில் நடத்தப்படும் கூட்டுப் பயிற்சி, கடந்த மாதம் 27ஆம் நாள் தொடக்கம், இம்மாதம் 1ஆம் நாள் வரையான ஆறு நாட்கள் திருகோலையில் இடம்பெற்றன.

இதில், இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள், சிறிலங்கா கடற்படையின், ஆறு போர்க்கப்பல்கள், ஆறு அதிவேகத் தாக்குதல் படகுகளும், பங்கேற்றன.

SLINEX-2015 (1)SLINEX-2015 (2)SLINEX-2015 (3)SLINEX-2015 (5)SLINEX-2015 (4)SLINEX-2015 (6)SLINEX-2015 (7)SLINEX-2015 (8)

சிறிலங்கா கடற்படையில் அண்மையில் இணைத்துக் கொள்ளப்பட்ட, இஸ்ரேலியத் தயாரிப்பான, சுப்பர் டோரா மார்க் – III அதிவேக தாக்குதல் படகுகள் இரண்டும் இந்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்தக் கூட்டுப் பயிற்சியின் நிறைவு நாளான கடந்த முதலாம் நாள், திருகோணமலைக் கடற்பரப்பில் நடந்த நிகழ்வில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி மற்றும், சிறிலங்காவின் முப்படைகளினதும் தளபதிகள் பங்கேற்றனர்.

இவர்கள், சிறிலங்கா கடற்படையின் சயுர என்ற ஆழ்கடல் ரோந்துப் படகில் இருந்து, கூட்டுப் பயிற்சியின் இறுதி நிகழ்வுகளை பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *