சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகராக கரு ஜெயசூரிய தெரிவு
சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக, ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய சற்றுமுன்னர் ஒரு மனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 9.30 மணியளவில் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு ஆரம்பமானது.
இதில் முதலாவதாக சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. சபாநாயகர் பதவிக்கு கரு ஜெயசூரியவின் பெயர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்டது.
அதனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வா வழிமொழிந்தார்.
வேறெவரும் சபாநாயகர் பதவிக்குப் போட்டியிடாத நிலையில், கரு ஜெயசூரிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் சபாநாயகர் ஆசனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் அமரவைக்கப்பட்டார். இதையடுத்து கரு ஜெயசூரியவின் தலைமையில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்று வருகிறது.