மேலும்

வடக்கு படைத்தளங்களில் சிறிலங்காவின் புதிய இராஜதந்திரிகள்

???????????????????????????????வெளிநாடுகளுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர்கள் வடக்கிற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் அரசியல் செல்வாக்கில் நியமிக்கப்பட்ட வெளிநாடுகளுக்கான 29 தூதுவர்கள் திருப்பி அழைக்கப்பட்ட நிலையில், அவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்படவுள்ள புதிய தூதுவர்களுக்கு வெளிவிவகார அமைச்சு பயிற்சி அளித்து வருகிறது.

சிறிலங்காவின் புதிய தூதுவர்கள் 22 பேருக்கு, அண்மையில் 10 நாள் பயிற்சி ஆரம்பமானது.

இதன் ஒரு கட்டமாக வடக்கில் உள்ள நிலைமைகள் குறித்து நேரடியாக கண்டறியும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வடக்கிலுள்ள படையினர் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் குறித்து, புதிய தூதுவர்களுக்கு விளக்கமளிக்கப்படுகிறது.

new-diplomats-wanni (2)??????????????????????????????????????????????????????????????

இதன் ஒரு கட்டமாக நேற்று வன்னிப் படைகளின் தலைமையகத்துக்கு புதிய இராஜதந்திரிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு வன்னிப் படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள பகுதிகளின் பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் ஏனைய விவகாரங்கள் குறித்து, வன்னிப்படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா விளக்கமளித்தார்.

சிறிலங்காவின் புதிய இராஜதந்திரிகள் வெளிநாடுகளில் வடக்கில்  இருந்து படைகளை அகற்றுவது உள்ளிட்ட விவகாரங்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதால், அதற்கான முன்னேற்றபாடாகவே அவர்கள் வடக்கிலுள்ள படைத்தளங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *