சிறிலங்கா கடற்படைத் தளபதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேராவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவுள்ளது. இந்தநிலையில் அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
சிறிலங்கா கடற்படைத் தளபதியாக, வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றிருந்தார்.
இவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படா விட்டால், தற்போது கடற்படைத் தலைமை அதிகாரியாக இருக்கும் ரியர் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன சேவை மூப்பு அடிப்படையில், சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்படக் கூடும் என்று லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.