யாழ்.பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப நிறுவகத்தை அமைக்க சீனா உதவி
சிறிலங்காவுக்கு விஞ்ஞான தொழில்நுட்பத்துறையில் உதவிகளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக, சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
சீனாவின் குன்மிங் நகரில் நடந்த சீன- தெற்காசிய தொழில்நுட்ப மாற்ற மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் கருத்தரங்கில் கலந்து கொண்டு விட்டு கொழும்பு திரும்பிய பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்துறையில் உதவிகளை வழங்க சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
மொரட்டுவ மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களுடன் இணைந்ததாக தொழில்நுட்ப நிறுவகத்தை அமைக்க சீனா உதவி வழங்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.