மேலும்

இந்த ஆண்டு இறுதியில் கொழும்பு வருகிறார் ஒபாமா

obamaஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த ஆண்டு இறுதியில் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐதேக தலைமையகமான சிறிகோத்தாவில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து. அமெரிக்க – சிறிலங்கா இடையிலான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளதுடன், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியும் கடந்த மே மாதம் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

சிறிலங்காவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மேற்கொள்ளும் பயணமே, அமெரிக்க அதிபர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது பயணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *