ரட்ணசிறி, டி.எம்.ஜெயரட்ணவை ஆலோசகர்களாக நியமித்தார் மைத்திரி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மூத்த ஆலோசகர்களாக, முன்னாள் பிரதமர்களான ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் டி.எம்.ஜெயரட்ண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகர்களாக இவர்கள் செயற்படுவர் என்று, அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களான இவர்கள், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பக்கம் சாய்வதைத் தடுக்கும் ஒரு நகர்வாகவே, இவர்களை தனது ஆலோசகர்களாக நியமித்துள்ளதாக கருதப்படுகிறது.