இம்மாத இறுதியில் சிறிலங்கா வருகிறார் அப்துல் கலாம்
சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வலு மற்றும் சக்தி தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இம்மாத இறுதியில் கொழும்பு வரவுள்ளார்.
வலு மற்றும் சக்தி வளங்கள் தொடர்பான கருத்தரங்கு எதிர்வரும் ஜூன் 26, 27ஆம் நாள்களில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்தக் கருத்தரங்கிலேயே இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிரதம விருந்திராக கலந்து கொள்ளவுள்ளார்.
புதுடெல்லியில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமை, சிறிலங்காவின் சக்தி, மின் வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடந்த 8ம் நாள் சந்தித்து, இந்த கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை அப்துல் கலாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.