மேலும்

வரும் 20ம் நாளுக்குப் பின்னர் நாடாளுமன்றம் கலைப்பு – சிறிலங்கா அதிபர் அறிவிப்பு

maithri19வது திருத்தச்சட்டமூலம் வரும் 20ம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவவில் இன்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘நாடாளுமன்றத்தில் வரும் 20ம் நாள், 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

அதன் பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும்.

இவற்றுக்குப் பின்னர், தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகள் அனைத்தும் தணிந்து விடும் ‘என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *