மேலும்

19வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் கருத்து வெளியானது

Supreme Courtநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தம், சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு இசைவானதே என்றும், எனினும் இதன் சில பகுதிகளை நிறைவேற்ற கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா உயர்நீதிமன்றம் வியாக்கியானம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த பின்னர், அதுபற்றிய தமது கருத்தை, நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பியிருந்தது.

சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று பிற்பகல் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இதன்படி, 19வது திருத்தச் சட்டமூலத்தின் பெரும்பாலான பகுதிகள், அரசியலமைப்புக்கு இசைவானதாகவே இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், இதில் இடம்பெற்றுள்ள சில விடயங்கள், அரசியலமைப்புக்கு முரணானதாக இருப்பதால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதனை சபாநாயகர் அறிவித்ததும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எழுந்து, கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த பகுதிகளை அரசியலமைப்புத் திருத்த யோசனையில் இருந்து நீக்கிவிட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *