அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் எச்சரிக்கை
சிறிலங்காவில் தேர்தல் பரப்புரைக் காலத்தில், அமெரிக்க குடிமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கம் எச்சரிக்கை குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
“சிறிலங்காவில் அதிபர் தேர்தல் வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ளது.
சிறிலங்காவில் அரசியல் பரப்புரைப் பேரணிகள் வன்முறையாக மாறுவது வழக்கம்.
அமெரிக்க குடிமக்கள், வாக்களிப்பு நிலையங்கள், அரசியல் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இடையூறுகள் தொடர்பாக உள்ளூர் ஊடகங்களை அவதானிக்க வேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கோரியுள்ளது.