மேலும்

நிறைவேற்று அதிகார ஆட்சிமுறைக்கு எதிராக கொழும்பில் பாரிய பேரணி – மங்களவும் இணைந்தார்

colombo-meetingநிறைவேற்று அதிகார ஆட்சிமுறைக்கு எதிராக சிறிலங்காவின் முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து  கொழும்பில்  இன்று மாலை பாரிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளன.

கொழும்பு கங்காராமை முத்தையா மைதானத்தில், ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாதுளுவாவே சோபித தேரர், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜெயசூரிய, சஜித் பிறேமதாச, மங்கள சமரவீர உள்ளிட்ட ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த, ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட எதிர்கட்சி அரசியல் தலைவர்களும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

colombo-meeting

எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளரை முன்னிறுத்தும் முதல் முயற்சியே இந்தப் பேரணி என்று கருதப்படுகிறது.

அரசதரப்புக்குத் தாவப் போவதாக கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரப்பாக பேசப்பட்ட மங்கள சமரவீரவும், இந்தக் பேணியில் கலந்து கொண்டார்.

இந்தப் பேரணியில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *