மேலும்

Archives

திருப்பதியில் சிறிலங்கா அதிபரை நிர்க்கதியாக நிற்க விட்ட சாரதி

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நேற்று வழிபாடு நடத்தச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கார் சாரதி காணாமற்போனதால், 12 நிமிடங்களுக்கு மேலாக காரில் காத்திருக்க நேரிட்டது.

வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.

யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதுவர் – நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் தனித்தனியாக பேச்சுக்களை நடத்தினார்.

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படையின் “ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்”

யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் விமானப்படையினர் ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல் என்ற மனிதாபிமான உதவி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

றோவின் முகவராகச் செயற்பட்டார் மாத்தயா – புதிய நூலில் வெளியாகியுள்ள தகவல்கள்

விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தயா எனப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா, இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான றோவின் முகவராகச் செயற்பட்டிருந்தார் என்று, இந்திய ஊடகவியலாளர் நீனா கோபால் எழுதி, வெளியாகியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாக இருந்த கொமடோர் அஜித் போயகொடவின் அனுபவங்கள்

எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு கூறப்பட்டோம்.

சிறிலங்கா அமைச்சர்களுடன் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்காக உதவிச்செயலர் சார்ள்ஸ் எச்.றிவ்கின் நேற்று சிறிலங்கா அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

காணாமற்போனோர் பணியக சட்டத்துக்கு எதிராக சிறிலங்கா இராணுவத்தினர் போராட்டம்

காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி, தேசிய போர் வீரர்கள் அமைப்பு, வீரலங்கா பவுண்டேசன் ஆகியவற்றின் தலைமையில் சிறிலங்கா படையினர் நேற்று போராட்டம் ஒன்றை நடத்தினர்.

சம்பந்தனைச் சந்தித்தார் நோர்வே பிரதமர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே பிரதமர் எர்ணா சொல்பேர்க் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அமெரிக்க, சிறிலங்கா படைகளுக்கிடையில் முதல்முறையாக பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல்

சிறிலங்கா- அமெரிக்க ஆயுதப்படைகளுக்கு இடையில் முதலாவது செயல்மட்ட இருதரப்பு பாதுகாப்புக் கலந்துரையாடல், கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இரண்டு நாட்கள் கொழும்பில் நடத்தப்பட்டது.