மேலும்

Archives

கொழும்பு வந்தார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்காக உதவிச் செயலர் சார்ள்ஸ் எச்.றிவ்கின் இரண்டு நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டி- மொங்கோலிய வீரரிடம் துளசி தருமலிங்கம் தோல்வி

றியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், நேற்று நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் கட்டார் நாட்டு அணியின் சார்பில் பங்கேற்ற, ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம், மொங்கோலிய நாட்டு வீரரிடம் தோல்வியடைந்தார்.

எங்கள் நிலத்தை சிறிலங்கா கடற்படை கொள்ளையிடக் கூடாது – முல்லைத்தீவு மக்கள்

வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் நிரந்தரமாகக் கையகப்படுத்தப்படத் திட்டமிடப்பட்ட நிலப்பகுதியை அளவீடு செய்து அவற்றின் எல்லைகளைக் குறிப்பதற்காகச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் கடந்த வாரம், கிராம மக்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

காஷ்மீர் கலவரங்கள் குறித்து சிறிலங்கா அதிபரிடம் முறையிட்ட பாகிஸ்தான் தளபதி

இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் தற்போது நடந்து வரும் கலவரங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான் விளக்கமளித்துள்ளார்.

கொழும்பில் முக்கிய பேச்சுக்களில் பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி

இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான், நேற்று சிறிலங்கா பிரதமர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

78 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 தமிழ் அரசியல் கைதிகள், நேற்றுக்காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலஅபகரிப்பு விவகாரம்

வடக்கிலுள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது. தனியார் நிலங்களைக் கையகப்படுத்துவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக சமூகத்தைத் தவறாக வழிநடத்துவதாகவும் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்காவுக்கு போர் விமானங்களை விற்கும் முயற்சிகளை புதுப்பிக்குமா பாகிஸ்தான்?

இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான் நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ள நிலையில், ஜேஎவ்-17 போர் விமானங்களை சிறிலங்காவுக்கு விற்கும் முயற்சிகளில் பாகிஸ்தான மீண்டும் இறங்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா கடற்பரப்பில் எரிவாயு ஆய்வு – 6 வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சு

சிறிலங்கா கடற்பரப்பில் இயற்கை எரிவாயு அகழ்வுக்கான சாத்தியங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு, அடுத்தவாரம் அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் என்று சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால அனைத்துலக அரசியல், பொருளாதார நோக்கு

வல்லரசுகள் தமது நலன்களை பேணும் போக்கில் கவனம் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள் தமது பதவிகளை பேணுவதில் கவனம் கொண்டுள்ளனர். மக்களும் தமது நலன்களின் அடிப்படையிலேயே வாழ விரும்புவர். இந்நிலையில் கடந்த காலங்களில் வாழ்ந்த தியாகம் மற்றும் தன்னலமற்ற போராட்டம் என்பன இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் வெறும் பேச்சுப்பொருளாக மாறும் அபாயமே உள்ளது .