மேலும்

Archives

நிமால், அற்புதன், மகேஸ்வரி – ஈபிடிபியின் படுகொலைகளை அம்பலப்படுத்திய மூத்த உறுப்பினர்

ஊடகவியலாளர்கள் நிமலராஜன், நடராஜா அற்புதராஜா, கே,எஸ்.ராஜா மற்றும் சட்டவாளர் மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்டோரை ஈபிடிபியினரே படுகொலை செய்ததாகவும், சிறிலங்கா படையினருடன் இணைந்து இதுபோன்ற கொலைகள், ஆட்கடத்தல்களில் ஈபிடிபி ஈடுபட்டதாகவும் அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் பாரிய தீவிபத்து

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில்  இன்று பிற்பகல்  பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இறப்பர் களஞ்சியத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவுக்கான அடுத்த இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து

சிறிலங்காவுக்கான அடுத்த இந்தியத் தூதுவராக தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்படவுள்ளார் என்று புதுடெல்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்த அமெரிக்க போர்க்கப்பல் நாளை கொழும்பு வருகிறது

அமெரிக்கக் கடற்படையின் பாரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் ( ஏ.எஸ்-40)  நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளதாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் அரச, சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அமெரிக்க உயர்அதிகாரி முக்கிய பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச்செயலர் வில்லியம் ஈ ரொட், சிறிலங்கா அரசாங்க மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தினார்.

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைச் செயலர் – கூட்டுப் பயிற்சியை ஆய்வு

அமெரிக்காவின் கடற்படைச் செயலர் ரே மபுஸ், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, திருகோணமலை கடற்படைத் தளத்தில் நடக்கும், கூட்டுப் பயிற்சிகளை பார்வையிட்டுள்ளார்.

சிறிலங்காவில் மற்றொரு அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி

சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த பேச்சுக்களை நடத்துவதற்காக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் வில்லியம் ஈ ரொட் நேற்று சிறிலங்கா வந்துள்ளார்.

ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்ஸ்

கறுப்பு நிற ஆடையை அணிந்திருந்த,வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,  கடந்த வாரம் அமெரிக்க வான்படையினரின் சி-130 போக்குவரத்து விமானத்திலிருந்து பலாலி விமான நிலையத்தில்  இறங்கிய காட்சியானது, Living Daylights என்கின்ற திரைப்படத்தில் ஜேம்ஸ் பொன்ட் 007 கதாபாத்திரத்திற்காக நடித்த ரிமோதி டல்ரன் என்பவர் சி-130 சரக்கு விமானத்திலிருந்து குதித்த காட்சியை நினைவுபடுத்தியது.

வடக்கு முதலீட்டாளர் மாநாட்டை புறக்கணித்தார் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நேற்றைய நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார்.

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை – காலை வாரியது அமெரிக்கா

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த அமெரிக்கத் தூதுவர் இணங்கிய போதிலும், யாழ்ப்பாணத்தில் மருத்துவ முகாம் நடத்திய அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள், முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகளை நடத்த மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.