மேலும்

Archives

கலகங்களை அடக்க சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையில் புதிய பிரிவு

சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையில், கலகம் அடக்கும் புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தி கலகம் அடக்கும் நடவடிக்கைகளில், ஈடுபடுத்துவதற்காக இந்த சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறலில் வேகமில்லை – ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,கவலை வெளியிட்டுள்ளார்.

சீன இராணுவத் தளங்களுக்கு சிறிலங்காவில் இடமில்லை – சிறிலங்கா தூதுவர்

சிறிலங்காவில் எந்தவொரு துறைமுகத்திலும் இராணுவத் தளங்களை அமைப்பதற்கு சீனாவுக்கு இடமளிக்கப்படாது என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 21 ஆவது முதல்வராகப் பதவியேற்கிறார் சசிகலா

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக,அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் வரும் 9ஆம் நாள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். போராட்டத்தைப் படம் பிடித்த சிறப்புப் படைப்பிரிவு அதிகாரி

யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அருகே நேற்று நடத்தப்பட்ட கருப்புக் கொடி ஏந்திய கவனயீர்ப்புப் போராட்டத்தை சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவை சேர்ந்த ஒருவர் காணொளிப்படம் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

சீனாவின் பட்டுப்பாதை திட்டம் – சிறிலங்காவில் வலுக்கும் மனக்கசப்பும் எதிர்ப்பும்

கேந்திர முக்கியத்துவம் மிக்க அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை மேலும் விருத்தி செய்தல் மற்றும் இதற்கருகில் பாரியதொரு கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில் கடந்த ஆண்டின் இறுதியில் சீனா கைச்சாத்திட்டது.

கருப்புக் கொடிகளுடன் சிறிலங்காவின் சுதந்திர நாள்

சிறிலங்காவின் 69ஆவது சுதந்திர நாளான நேற்று, வடக்கில் பல்வேறு இடங்களில், கருப்புக்கொடிகள் பறக்கவிட்டு துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

உறவுகளை பலப்படுத்துவது இரு நாடுகளுக்கும் முக்கியம் – சிறிலங்கா அமைச்சரிடம் இந்தியத் தூதுவர்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக அண்மையில் பதவியேற்ற தரன்ஜித் சிங் சந்து, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை முதல் முறையாகச் சந்தித்து, இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் விரைவாக  கையெழுத்திடுவது குறித்து பேச்சு நடத்தியுள்ளார்.

பண்பாட்டு விழாவாக கட்டமைக்கப்பட்டிருந்த பாரீஸ் பொங்கல் விழா – பேராசிரியர் சி.மௌனகுரு

புலம் பெயர்ந்த நாடுகளில் தம் பண்பாட்டைத் தக்கவைக்க புலம் பெயர்ந்த மக்கள் கூட்டம் நிறைய முயற்சிகள் செய்கின்றது. சமய விழாவாக அன்றி ஒரு பண்பாட்டு விழாவாக, ஒரு கருத்தியலின் பின்னணியில் பாரீஸ் பொங்கல் விழா கட்டமைக்கப் பட்டிருந்ததாக இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தாயகத்திலிருந்து அழைக்கப்பட்டிருந்த பேராசிரியரும் அரங்கியல் ஆய்வாளரும் நெறியாளருமான சி.மௌனகுரு அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்கா அதிபருடன் நல்லிணக்க கலந்தாய்வு செயலணி சந்திப்பு

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.