சிறிலங்காவில் ஜனநாயக நெறிமுறைகள் மதிக்கப்படும் – இந்தியா நம்பிக்கை
சிறிலங்காவில் ஜனநாயக நெறிமுறைகள் மதிக்கப்படும் என்று நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமாரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.