மேலும்

Tag Archives: பிள்ளையான்

சொத்துக்களை வெளிப்படுத்தாத 41 பேரில் டக்ளஸ், பிள்ளையான், சுரேன் ராகவன்

டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், சுரேன் ராகவன் உள்ளிட்ட 41 உயர்மட்ட பிரமுகர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான அறிக்கையை கடந்த ஆண்டு சமர்ப்பிக்கவில்லை என்று இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை சிறையில் கேக் வெட்டி கொண்டாடிய பிள்ளையான்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர்,  மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், கேக் வெட்டி கொண்டாடியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு படுகொலைகள்- பிள்ளையானின் சகாக்கள் இருவர் நேற்றும் இன்றும் கைது

கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக, பிள்ளையான் மற்றும்  இனியபாரதியின் சகாக்கள் இருவர்,  மட்டக்களப்பில் வைத்து நேற்றும் இன்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிள்ளையானின் 6 துப்பாக்கிதாரிகளை கைது செய்ய சிஐடி நடவடிக்கை

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ், பணியாற்றிய ஆறு துப்பாக்கிதாரிகளை  கைது செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத்துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக சிங்கள வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு கைதுகளின் இலக்கு என்ன?

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை பிள்ளையான் முன்னரே அறிந்திருந்தார்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடக்கப் போவது தொடர்பாக, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் ( சிவநேசதுரை சந்திரகாந்தன்) முன்னரே அறிந்திருந்தார் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பிள்ளையானின் 3 சகாக்களிடம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை

பிள்ளையானின் மூன்று சகாக்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இனியபாரதியின் சகாவும் கைது- நீண்ட குற்றப்பட்டியலுடன் விசாரணை

பிள்ளையானிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே, இனியபாரதியும் மற்றொருவரும் கிழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

அடிப்படை உரிமை மீறல் மனுவும் பிள்ளையானின் காலை வாரியது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருலுமான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனின், அடிப்படை உரிமை மீறல் வழக்கை, 2018 மார்ச் 20ஆம் நாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கருணா, பிள்ளையான் மீது எந்த நடவடிக்கையும் இல்லை – ஐ.நா அறிக்கையில் அதிருப்தி

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக, கருணா மற்றும் பிள்ளையான் மீது இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.