மேலும்

பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்- ஒப்புக் கொள்கிறார் சவேந்திர சில்வா

சிறிலங்காவில் போரின் இறுதிக் கட்டங்களில் தவறுகள் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.

அம்பிட்டியே சுமணரதன தேரர் விளக்கமறியலில்

மட்டக்களப்பில் உள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரதன தேரர் மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் வழக்கு

22வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் சரியாக விசாரிக்கத் தவறியதால், இரண்டு மனுதாரர்களின் உரிமைகள் மீறப்பட்டதாக அறிவிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று மதியம் கொழும்பு வரும் ராஜ்நாத் சிங்- போக்குவரத்துகளில் மாற்றம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சிறிலங்கா பயணத்தை முன்னிட்டு, இன்று முதல் 10ஆம் நாள் வரை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து  ஒழுங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நீர்த்துப்போன ஐ.நா அறிக்கை – குற்றம்சாட்டும் சிவில் சமூகம்

இரு பத்தாண்டு கால உள்நாட்டுப் போர் முடிந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வருடாந்த அறிக்கை, நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய ஒற்றுமையை வளர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவிடம் வான் பாதுகாப்பு ஆயுதங்களைக் கோரிய சிறிலங்கா

வான்வழி அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, சிறிலங்கா,  இந்தியாவிடம் வான் பாதுகாப்பு ஆயுதங்களைக் கோரியிருப்பதாக இந்திய ஊடகமான The Tribune செய்தி வெளியிட்டுள்ளது.

நேட்டோவுடன் சிறிலங்கா பாதுகாப்பு கூட்டணி- கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு

சிறிலங்காவுடன் ஒத்துழைத்துச் செயற்பட நேட்டோ அமைப்பிற்கு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த அழைப்பு விடுத்துள்ளதற்கு சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாளை வருகிறார் ராஜ்நாத் சிங்- இந்திய பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்ரெம்பர் 8 முதல் 10ஆம் நாள் வரை சிறிலங்காவில் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

நினைவு பசுமையாக இருக்கும்போதே நீதி வழங்கப்பட வேண்டும்- என்கிறார் அனுர

நீதி பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் அது விரைவாக வழங்கப்பட வேண்டும், என, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, தெரிவித்துள்ளார்.

இறந்த தமிழர்களை சிறிலங்காவினால் இரண்டுமுறை புதைக்க முடியாது

1956ஆம் ஆண்டு நடந்த படுகொலைகள் மற்றும் கறுப்பு ஜூலை முதல் முள்ளிவாய்க்கால் மற்றும் செம்மணி வரை, சிறிலங்காவின் வரலாறு வெறும் அட்டூழியங்களால் மட்டும் களங்கப்படுத்தப்படவில்லை.