மேலும்

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை ஒழிக்கும் சட்டம் நிறைவேறியது

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி (Chief of Defence Staff) பதவியை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி (ரத்து செய்தல்) சட்டமூலம்’ சிறிலங்கா  நாடாளுமன்றத்தில் நேற்றுமாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய முப்படைகளின் துணைத் தளபதிகள் அருண ஜயசேகரவுடன் சந்திப்பு

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள  உயர்மட்ட இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள், சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

சிறிலங்கா அதிபருடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  இன்று காலை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை அவரது பணியகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறல் செயல்முறை இன்னும் இல்லை – அனுசரணை நாடுகள் குழு

கடந்தகால மீறல்களைக் கையாளுவதற்கான  விரிவான, பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட பொறுப்புக்கூறல் செயல்முறை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கா தொடர்பான அனுசரணை நாடுகளின் குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அருகே 47 கப்பல்கள் – கண்காணிக்கப்படுகிறதா என அமெரிக்கா கேள்வி

சிறிலங்காவுக்கு அருகே அனைத்துலக கடற்பகுதியில் பல ஈரானியக் கப்பல்கள் இருப்பது குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சிறிலங்கா வெளிவிவகார  அமைச்சிடம் விசாரித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

சிறிலங்கா நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் இந்தியா துணையாக நிற்கும்

சிறிலங்கா நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம், இந்தியா எப்போதும் உறுதியாக அதற்குத் துணை நிற்கும் என்று, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று 3 பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்தாகும்

இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் சிறிலங்கா பயணத்தின்  போது, கையெழுத்திடப்படும் 3 முக்கிய உடன்பாடுகளின்  மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பாதுகாப்புப் பங்காளித்துவம் மேலும் வலுப்படுத்தப்படும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறைமதிப்பிற்குட்படுத்துவதற்குப் பதிலாக ஐ.நாவை ஆதரவளிக்க கோருகிறது சிறிலங்கா

சிறிலங்காவின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அணுகுமுறைகளுக்குப் பதிலாக,  ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆதரவளிக்க வேண்டும் என, சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ் உதயகிரி

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் உதயகிரி போர்க்கப்பல், சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணமாக இன்று, காலை  கொழும்பு துறைமுகத்தை  வந்தடைந்துள்ளது.

கொழும்பு வந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.