மேலும்

ஈரானிய கப்பல்களுக்கு இராஜதந்திர அழைப்பு விடுக்கப்படவில்லை

ஈரானிய கடற்படைக் கப்பல்களுக்கு இராஜதந்திர மட்டத்திலான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு மேலதிகமாக 100 மில்லியன் டொலர் நிதியுதவி

சிறிலங்காவிற்கான நிதி ஒதுக்கீட்டை 100 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கன்டா தெரிவித்துள்ளார்.

எரிசக்தி நெருக்கடி குறித்து சிறிலங்கா அதிபருடன் இந்தியப் பிரதமர் பேச்சு

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம்  கலந்துரையாடியுள்ளார். இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் சிறிலங்கா வருகிறார்

ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான ரஷ்ய தூதுக்குழு, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

மின்சார சிக்கனத்தை தீவிரப்படுத்துமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவு

எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், உச்ச பயன்பாட்டு நேரங்களில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த பரப்புரையை தீவிரப்படுத்துமாறும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்திய- சிறிலங்கா வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை

மேற்காசிய மோதலின் பின்விளைவுகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித `ஹேரத்துடன் கலந்துரையாடியுள்ளார்.

ஈரானியக் கப்பல்களுக்கு சிறிலங்கா அழைப்பு விடுத்திருந்தது – தூதுவர் விளக்கம்

சிறிலங்கா அரசாங்கம், மூன்று ஈரானியக் கப்பல்களான ஐஆர்ஐஎஸ் டேனா, ஐஆர்ஐஎஸ் புஷேர் மற்றும் ஐஆர்ஐஎஸ் லாவன் ஆகியவற்றை நல்லெண்ணப் பயணத்திற்காக, அதிகாரப்பூர்வமாக அழைத்திருந்தது என்று, சிறிலங்காவுக்கான ஈரானியத் தூதுவர் அலிரெசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சாலே கைதுக்கு எதிரான மனுவை 6 மாதங்களுக்குப் பின் விசாரிக்க முடிவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, 6 மாதங்களுக்குப் பின் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் கொழும்பு பயணம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கன்டா (Masato Kanda)  இன்று சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்தியா, சிறிலங்காவின் பாதுகாப்பு பிரிக்க முடியாதது- சிவசங்கர் மேனன்

இந்திய- சிறிலங்கா உறவுகள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவுச் செயலருமான சிவ்சங்கர் மேனன், இந்தச் செவ்வியில் விபரித்துள்ளார்.