மேலும்

மீண்டும் ஒரு அமெரிக்க போர்க்கப்பல் கொழும்புக்கு வருகை

அமெரிக்க கடற்படையின் இன்டிபென்டன்ஸ் வகை கரையோர போர்க்கப்பலான யுஎஸ்எஸ் துல்சா (USS Tulsa)  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

சீனாவுடன் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு அனுமதி

சிறிலங்கா பழங்களுக்கான மதிப்பு கூட்டலை மையமாகக் கொண்ட ஒரு திட்டத்தின் நிலையான தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, சீன வெப்பமண்டல விவசாய அறிவியல் அகாடமியுடன் புரிந்துணர்வு  உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது.

ரணில் கைதுக்கு எதிராக வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தங்கள் இல்லை

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக எந்த இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எந்த எதிர்ப்பும்  தெரிவிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார்.

இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை தடுக்க நடவடிக்கை

இன அல்லது மத நோக்கங்களுடன் அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தியில் இன்று வரை 169 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிறிலங்கா படைகளை நவீனமயப்படுத்த அதிபர் அனுர உத்தரவு

சிறிலங்கா ஆயுதப் படைகள் உலகின்  மிகச் சிறந்த தொழில்முறைப் படைகளில் ஒன்றாக உருவாக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் குழு சிறிலங்கா வந்தது

அமெரிக்க காங்கிரசின் இருகட்சிகளின் உறுப்பினர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

வழக்கு முடியும் வரை ரணிலை சிறையில் வைக்க முயன்ற சட்டமா அதிபர்

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய வழக்கில், முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை வழக்கு முடியும் வரை விளக்க மறியலில் வைப்பதற்கே சட்டமா அதிபர் திணைக்களம் முற்பட்டுள்ளது.

ரணில் வழக்கை பார்வையிட நீதிமன்றம் சென்றாரா பிரித்தானிய தூதுவர்?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வழக்கைப் பார்வையிட பிரித்தானிய தூதுவர் அன்ட்ரூ பட்றிக்  நீதிமன்றம் சென்றதாக வெளியான செய்திகளை சிறிலங்காவிற்கான பிரித்தானிய தூதரகம் நிராகரித்துள்ளது.

ரணிலை பிணையில் விடுவித்த நீதிமன்றம் – மருத்துவமனையிலேயே தங்குவார்.

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.