மேலும்

அமைச்சர் பதவியில் இருந்து அஜித் பெரேராவும் விலகினார்

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சரான அஜித் பெரேராவும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

வாழ்த்து தெரிவித்த மோடி – விரைவில் சந்திக்க விருப்பம் வெளியிட்டார் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள  சிறிலங்கா  பொதுஜன பெரமுன வின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார் மங்கள

சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் பதவியில் இருந்து விலகியுள்ளார் எனவும், பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறிலங்கா அதிபருக்கு  அனுப்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

பதவி விலகினார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை அடுத்து, விளையாட்டு,தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக ஹரின் பெர்னான்டோ அறிவித்துள்ளார்.

நாளை அனுராதபுரவில் பதவியேற்கிறார் கோத்தா

சிறிலங்காவின் புதிய  அதிபராக  கோத்தாபய ராஜபக்ச நாளை அனுராதபுரவில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார் என்று, வண. உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார்.

கிழக்கிலும் சஜித்துக்கு அமோக வெற்றி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச சுமார் 69 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தோல்வியை ஏற்றுக் கொண்டார் சஜித் – கோத்தாவுக்கு வாழ்த்து

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகவும், வெற்றிபெற்றுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

வெற்றியை நோக்கி நகருகிறார் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில், பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 50 வீதத்துக்கும் சற்று குறைவான வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

கோத்தா வென்று விட்டதாக மொட்டு அறிவிப்பு – வெற்றியை கொண்டாட கோருகிறது

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளர்  கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்று விட்டார் என உரிமை கோரியுள்ளது சிறிலங்கா பொதுஜன பெரமுன.