மேலும்

சீனாவுடன் சுதந்திர வணிக உடன்பாடு – சிறிலங்கா அமைச்சர் பேச்சு

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்து, பீஜிங்கில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

மரண தண்டனையை நிறைவேற்றும் செயற்பாடுகள் அனைத்தையும் இடைநிறுத்த உத்தரவு

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து செயற்பாடுகளையும், ஒக்ரோபர் 30ஆம் நாள் வரை இடைநிறுத்தி வைக்குமாறு, சிறிலங்கா உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம் – சிறிலங்காவுக்கு ஆபத்து இல்லை

திருகோணமலைக்கு அப்பால், வங்காள விரிகுடாவில் நேற்றிரவு 10.48 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது என்று சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான உடன்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது கூட்டு எதிரணி

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது.

ஹேமசிறி, பூஜிதவை ஜூலை 9 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவும், கட்டாய விடுப்பில் உள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மரணதண்டனை நிறைவேற்றும் நாள் அறிவிக்கப்படவில்லை – சிறைச்சாலைகள் திணைக்களம்

மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த சிறிலங்கா அதிபரின் உத்தரவு தொடர்பாக, அதிபர் செயலகமோ, நீதி அமைச்சோ இதுவரை சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு எந்த தகவலையும் வழங்கவில்லை என்று, மூத்த சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோத்தாவைச் சந்தித்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

சிங்கப்பூரில் மருத்துவ கண்காணிப்பில் உள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் பார்வையிட்டுள்ளார்.

மாணவர்கள் படுகொலை – குற்றம்சாட்டப்பட்ட 13 அதிரடிப்படையினரும் விடுதலை

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 13 பேரும், குற்றங்களை நிரூபிக்க போதிய சாட்சியங்கள் இல்லை என்ற அடிப்படையில் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4

தெற்காசியப் பிராந்தியத்தில் மிகச்சிறிய இன அடையாளத்தை கொண்ட ஒரு அலகினால், அதீத மதவாத சிந்தனையின் பால் சார்ந்து,  நன்கு திட்டமிட்ட வகையில் தனது சவால்களை எதிர் கொள்வது மட்டுமல்லாது,  இதர இன அடையாளங்களை துல்லியமாக ஜனநாயகத்தின் பெயரால் பெளத்த மேலாண்மைக்குள் உள்ளாக்கக் கூடிய ஒரு தகைமையை சிறிலங்கா அரச திணைக்களங்களும்,  பௌத்த மதபீடங்களும் கொண்டிருக்கின்றன.

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி – நாளை மறுநாள் ஆரம்பம்

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை மறுநாள், ஆரம்பிக்கப்படவுள்ளன.