மேலும்

காணாமல்  ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகள் விரைவில் தொடங்கும்

வலுக்கட்டாயமாக காணாமல்  ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்காவின்  நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார  தெரிவித்துள்ளார்.

நேற்று புத்தாண்டின் முதல் நாள் வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நம்பிக்கை, நியாயம், சட்டம் மற்றும் ஒற்றுமை தேவை.

சமமான மொழி அணுகல், சமமான சேவை வழங்கல், மரியாதைக்குரிய சட்ட அமுலாக்கம் மற்றும் உள்ளடக்கிய கொள்கை உருவாக்கம் ஆகியவை மிக முக்கியமானவை என்பதால், தேசிய ஒருங்கிணைப்பு மூலம் சமூக நம்பிக்கையை மீட்டெடுப்பது அவசியம்.

ஒரு குடிமகன் தனது சொந்த மொழியில் அங்கீகரிக்கப்படுவதாகவும், சட்டத்தால் நியாயமாக நடத்தப்படுவதாகவும், அவர்களின் அடையாளத்தைப் பொருட்படுத்தாமல் பாதுகாக்கப்படுவதாகவும் உணரும்போது,  தேசிய ஒருங்கிணைப்பு முன்னேற்றமடையும்.

ஒரு மாதத்திற்குள் மூன்று மொழிகளிலும் அரசுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து வடிவங்களையும் அணுக மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார  தெரிவித்துள்ளார்.கூறினார்.

எனினும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விசாரணைகள் யாரால் எப்படி ஆரம்பிக்கப்படும் என்ற மேலதிக விபரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *