மேலும்

பிரிவு: செய்திகள்

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனைகிறாராம் சம்பந்தன் – பீரிஸ் குற்றச்சாட்டு

சீனாவுடனும், இந்தியாவுடனும், சுமுகமான உறவை சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.

பொதுமன்னிப்பு அளித்து விட்டதாக வெளியான செய்திகள் பொய் – சிறிலங்கா அதிபர் செயலகம்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு அளித்து விட்டதாக, நேற்று இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்களை சிறிலங்கா அதிபர் செயலகம் நிராகரித்துள்ளது.

கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முன்னரே தீர்மானம் எடுத்த சிறிலங்கா காவல்துறை

மன்னார், வெள்ளாங்குளத்தில் முன்னாள் போராளியான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தனிப்பட்ட குரோதத்தினால் நிகழ்ந்த கொலை என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

கனடா விமான விபத்தில் இரு தமிழ் இளைஞர்கள் பலி

கனடாவில் கடந்த செவ்வாய்க்கிழமைஇரவு இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனக் கடற்படை குறித்து இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும் – இந்தியப் பேராசிரியர் எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடற் பிராந்தியத்தில், துறைமுகங்களையும், தளங்களையும் கட்டியமைத்து, பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக, கடற்படைத் தலையீடுகளை விரிவுபடுத்தும் சீனாவின் ஆக்கிரமிப்புத் தொடர்பாக இந்தியா எந்நேரமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்தியப் பேராசிரியர் சிறீகாந்த் கொண்டபள்ளி தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணைகள் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து அதிருப்தி வெளியிட்டார் பீரிஸ்

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

சீனாவுடன் சேர்ந்து இந்தியாவின் கோபத்தைக் கிளறாதீர்கள் – சிறிலங்காவுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

குறுகிய அரசியல் நலன்களுக்காக இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான உறவைப் புறம்தள்ளி விட்டு, சீனாவுடன் உறவைப் பலப்படுத்துவதன் மூலம், சிறிலங்கா ஆபத்தையே விலைகொடுத்த வாங்க நேரிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்காவுக்கு வருகிறார்

கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அடுத்த மாத துவக்கத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக சூழ்ச்சி செய்யவில்லை – என்கிறது சிறிலங்கா

சிறிலங்காவில் பல்வேறு திட்டங்களில் சீனாவின் தலையீடுகள் இந்தியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சீனக் கடற்படையின் நடமாட்டங்களை உன்னிப்பாக அவதானிக்கிறோம் – இந்திய கடற்படைத்தளபதி

சீன நீர்மூழ்கிகள் சிறிலங்கா துறைமுகங்களுக்கு வருவது உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலில், சீனக் கடற்படையின் செயற்பாடுகளை இந்தியக் கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே.டோவன் தெரிவித்துள்ளார்.