மைத்திரியின் அமைச்சரவை இன்று நியமனம்
சிறிலங்காவின் புதிய அமைச்சரவையை, அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று நியமிக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தனது 100 நாள் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக 14 அமைச்சர்களை மைத்திரிபால சிறிசேன இன்று நியமிக்கவுள்ளார்.
அவரது அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் இடம்பெறுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, முன்னர் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 25 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், அது 35 ஆக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய அரசாங்கத்தில் பங்கெடுக்க அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், பிரதிஅமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.