மேலும்

பிரிவு: செய்திகள்

மாலைதீவுக்குத் தப்பியோடினார் கோத்தா – கொழும்பு ரெலிகிராப்

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்றில், மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக, கொழும்பு ரெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

தப்பியோடலைத் தடுக்க விழிப்பு நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள புலனாய்வு அதிகாரிகள் விழப்பு நிலையில் இருக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, மலையகமே தோற்கடித்து விட்டது – பொருமுகிறார் மகிந்த

வடக்கு, கிழக்குப் பகுதிகளும், மலையகமுமே அதிபர்  தேர்தலில்  தன்னைத் தோற்கடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்கா அதிபராக மைத்திரி, பிரதமராக ரணில் பதவியேற்றனர்

சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும், இன்று மாலை 6.21 மணியளவில்  பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

அமைச்சர்கள், பணியாளர்களிடம் விடைபெற்று மெதமுலானவுக்குச் சென்றார் மகிந்த

அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து இன்று காலையில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்ச, தனது சொந்த ஊரான மெதமுலானவுக்குச் சென்றுள்ளார்.

மைத்திரிக்கு சீனாவும் கை நீட்டுகிறது

சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், புதிய அரசாங்கம் சீனாவுடன் நட்புரீதியான கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மைத்திரியை இந்தியா வருமாறு மோடி அழைப்பு

சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், அவரை இந்தியாவுக்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

மைத்திரியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா விருப்பம் – மகிந்தவுக்கும் பாராட்டு

சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக இருப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் மைத்திரி – அதிகாரபூர்வமாக அறிவிப்பு

சிறிலங்காவின் புதிய அதிபராக, புதிய ஜனநாயக முன்னணியின் சின்னத்தின் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர்.

சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரி இன்று மாலை பதவியேற்பு

சிறிலங்காவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார்.