மேலும்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், மைத்திரியுடன் பேச்சுத் தொடரும்- சம்பந்தன்

sampanthan-rசிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஆரம்பித்துள்ள பேச்சுக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், அந்தப் பேச்சுக்கள் அவரது தலைமையிலான அடுத்த அரசாங்கத்திலும் தொடரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நிலையானதொரு தேசிய அரசாங்கம் அமையும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அதில் தமிழ் மக்களது பிரச்சினைக்கு நிச்சயம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுக்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.

இதன்போது அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் குறித்த விவகாரம், மீள்குடியேற்றம் உட்பட பல்வேறு  விடயங்கள் விவாதிக்கப்பட்டனஇ

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னரும் மைத்திரிபால சிறிசேனவே சிறிலங்கா அதிபராக இருப்பார் என்பதால், அவருடன் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசப்பட்டன” என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *