மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

புதுடெல்லியில் மைத்திரியை சந்தித்த சிறிலங்காவின் முக்கிய போர்க்குற்றவாளி

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, போர்க்குற்றவாளிகளில்  முக்கியமானவராக குற்றம்சாட்டப்பட்டு வரும் சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சந்தித்துப் பேசியுள்ளார்.

சுதந்திர நாள் அணிவகுப்பில் அரச தலைவர்களைக் கொல்லச் சதி – புலனாய்வுத் தகவலால் முறியடிப்பு

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில், புதிய அரசாங்கத்தின் தலைவர்களைக் கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்று குறித்து முன்னரே தகவல் கிடைத்ததால், அதனைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க பரப்புரை நிறுவனங்களை நட்டாற்றில் கைவிட்ட மகிந்த ஆட்சி

அமெரிக்காவில் சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்த்துவதற்கு பரப்புரை நிறுவனங்களுடன் முன்னைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள் புதிய அரசாங்கத்தினால் முறித்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஏமாற்றத்துடன் ஓய்வுபெறுகிறார் தயா ரத்நாயக்க – இராணுவத் தளபதி நியமனத்தில் கயிறிழுப்பு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு புதிய அரசாங்கம் சேவை நீடிப்பு வழங்க மறுத்துள்ள நிலையில், அவர் இன்றுடன் ஓய்வுபெற்றுச் செல்கிறார்.

28 தமிழ் இளைஞர்களை கடத்திப் படுகொலை செய்த 9 சிறிலங்கா கடற்படையினர் விரைவில் கைது

கொழும்பில் கப்பம் கோரிக் கடத்திய 28 தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்த, மூன்று உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 9 சிறிலங்கா கடற்படையினர் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் பொருளாதாரத்தை முன்னேற்ற அனைத்துலக நிதி நிறுவனங்கள், அமெரிக்காவுடன் பேச்சு

சிறிலங்காவின் பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்கு, உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம் மற்றும் அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களம் ஆகியவற்றின் உதவியை புதிய அரசாங்கம் நாடியுள்ளது.

13 பிளஸ் அழுத்தங்களைக் கைவிட்டது இந்தியா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தியா 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணும்படி வலியுறுத்தவில்லை என்று, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசின் உடன்பாட்டை மதிக்க வேண்டியது சிறிலங்கா அரசின் கடமை – சீனா

இன்னொரு நாட்டுடன் முன்னைய அரசாங்கம், செய்து கொண்ட இருதரப்பு உடன்பாட்டை மதிக்க வேண்டியது ஜனநாயக நாடு ஒன்றின் கடப்பாடு என்று சீனா தெரிவித்துள்ளது.

திருப்பதியில் மைத்திரிக்கு சங்கடம்: திறக்க மறுத்தது கருவறை தங்கக் கதவு – பூட்டை உடைத்து தரிசனம்

திருப்பதி ஆலயத்தில் நேற்று அதிகாலையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழிபாடு நடத்தச் சென்ற போது, ஏழுமலையானின் கருவறை தங்கக் கதவு திறக்கப்பட முடியாமல் பூட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணை கவனமாக மதிப்பீடு செய்யப்படும்- ஐ.நா

சிறிலங்காவில் பொறுப்புக்கூறும் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா கவனமாக மதிப்பீடு செய்யும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹன் ஹக் தெரிவித்துள்ளார்.