மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சந்திப்பு

zeid-tna (1)ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராசா, சிவசக்தி ஆனந்தன், எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

zeid-tna (1)

zeid-tna (2)

zeid-sampanthanஇந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இரா. சம்பந்தன், நீண்ட நேரம் ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் நடத்திய சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக குறிப்பிட்டார்.

மக்களின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும், அதிகாரப் பகிர்வின் அவசியத்தை வலியுறுத்தியதாகவும்“ அவர் கூறினார்.

அதேவேளை, மீள்குடியர்வுக்கு இவ்வளவு காலம் தாமதமடைந்துள்ளது குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிருப்தி வெளியிட்டதாகவும், அது தொடர்பாக இன்று மீண்டும் அரசாங்கத்துக்கு வலியுறுத்திக் கூறவுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சந்திப்பு”

  1. Karthigesu Indran
    Karthigesu Indran says:

    எல்லாப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு விட்டது என்று கூறி இருப்பார்ளா????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *