கூட்டமைப்பு – சுஸ்மா சந்திப்பு ஆரம்பமானது
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
தாஜ் சமுத்ரா விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்று வருகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சருடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தப் பேச்சுக்களில் ககலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.