மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்கள்

ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன. ஜேஎஸ் மகினாமி, ஜே.எஸ்சுசனாமி ஆகிய போர்க்கப்பல்களே கொழும்பு வந்துள்ளன.

வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றியமைக்கப்படுமா?- சம்பந்தன் தலைமையில் ஆலோசனை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வரும் வெள்ளிக்கிழமை, யாழ்ப்பாணத்துக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, வடக்கு மாகாணசபை அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் வெள்ளிக்கிழமையும் சிறிலங்காவில் விடுமுறை

எதிர்வரும் 15ஆம் நாள்- வெள்ளிக்கிழமையை அரசாங்க விடுமுறை நாளாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன வெளியிட்டுள்ளார்.

விக்னேஸ்வரன் மீது சுவாமிநாதன் சீற்றம் – உருப்படியாக எதையும் செய்யவில்லையாம்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யாத வடக்கு மாகாணசபை, மத்திய அரசாங்கம் மேற்கொள்ளும் மீள்குடியேற்ற, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முட்டுக் கட்டையாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார், சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.

சிறிலங்காவில் அமெரிக்க டொலருக்கு சமமான மதிப்பைப் பெறுகிறது சீனாவின் யுவான்

சிறிலங்காவில், அமெரிக்க டொலருக்கு நிகரான மதிப்பு சீனாவின் யுவான் நாணயத்துக்குக் கிடைக்கவுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தின் போது இதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் மைத்திரி பக்கம் சாயத் தயார்

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியில் இடம்பெற்றுள்ள சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்துக்கு மாற இருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தலையணைச் சண்டை – மோதிக்கொண்ட உறுப்பினர்கள்

சிறிலங்காவில் எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டப்படவுள்ள சிங்கள- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாடாளுமன்ற மைதானத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

துறைமுக நகரத் திட்டத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாது- சிறிலங்கா பிரதமர்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், சிறிலங்காவினதோ அல்லது அயல்நாடுகளினதோ பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதாக அமையாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினையைத் தீர்க்காவிடின், மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி ஏற்படும் – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை

இனப்பிரச்சினைக்கு இப்போது தீர்வு காணப்படாவிட்டால்,  மீண்டும் நாட்டை பிரிக்க தனிஈழம் கேட்கும், ஆயுதக் கிளர்ச்சிகள் தலைதூக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

ரணில் நாடு திரும்பியதும் அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் குறித்து இறுதி முடிவு

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து கடன்களைப் பெறுவது பேச்சுக்களில், சிறிலங்கா பிரதமர் சீனாவில் இருந்து நாடு திரும்பியதும், இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.