மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்கா அதிபரின் அமெரிக்கப் பயணம் திடீரென ரத்து

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம், திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

மேதினப் பேரணி – மகிந்த குறித்து மைத்திரி இறுதி முடிவு

காலியில் நடக்கவுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினப் பேரணியில், பங்கேற்காத சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் மகிந்த சமரசிங்க.

சிகிச்சைக்காகவே அமெரிக்கா சென்றாராம் கோத்தா

மருத்துவ சிகிச்சைக்காக தாம் வெளிநாடு சென்றிருப்பதால், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு முன்பாக இன்று முன்னிலையாக முடியவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர

சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராக பூஜித ஜெயசுந்தர நியமிக்கப்படவுள்ளார். அரசியலமைப்பு சபை இன்று பிற்பகல் இவரை பெயரை சிறிலங்கா அதிபருக்குப் பரிந்துரை செய்துள்ளது.

மகிந்தவும், கோத்தாவுமே புலிகளின் இலக்காம்- தயான் ஜெயதிலக கண்டுபிடிப்பு

மகிந்த ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவுமே புலிகளின் இலக்காக இருப்பர் என்று, சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியும், மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர்களில் ஒருவருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் மதிப்புக்கூட்டு வரி 15 வீதமாக அதிகரிக்கிறது

சிறிலங்காவில் மதிப்புக்கூட்டு வரி (வற் வரி) அடுத்த மாதம் 02ஆம் நாள் தொடக்கம் 15 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நிதி அமைச்சு இன்று இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதிகளவில் பாகிஸ்தான் மரக்கறிகளை சிறிலங்காவுக்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை

பாகிஸ்தானில் இருந்து மரக்கறிகளை அதிகளவில் இறக்குமதி செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்காவின் வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இதனைத் தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரப் பணிகள் அடுத்த மாதம் மீள ஆரம்பம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய கொள்கைகள் மற்றும், பொருளாதார விவகார அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரம் – ஒன்பது பேர் இதுவரை கைது

சாவகச்சேரி, மறவன்புலவில் கடந்த மாத இறுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை, ஒன்பது பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

தலைமன்னார்- இராமேஸ்வரம் பாலம் அமைக்கும் திட்டம் – தமக்குத் தெரியாது என்கிறது சிறிலங்கா

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக, இதுவரையில் எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படாத நிலையில், இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாலம் அமைப்பது குறித்து தகவல்களை தெரிவிப்பது அர்த்தமற்றது என்று சிறிலங்கா அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.