மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

பாகிஸ்தான் பிரதமருக்கு கட்டுநாயக்கவில் செங்கம்பள வரவேற்பு

மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று மாலை சிறிலங்கா வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மைத்திரியின் வாக்குறுதியை வரவேற்கிறது கூட்டமைப்பு

இடம்பெயர்ந்துள்ள ஒரு இலட்சம் மக்கள் ஆறு மாதங்களுக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவர் என்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதி சாதகமானதொரு முன்னேற்றம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தெற்கில் ‘சிங்க லே’ பரப்புரை தீவிரம் – ‘இனவாத தீ’ பரவுகிறதா?

சிறிலங்காவின் தென்பகுதியில், சிங்க லே (சிங்கத்தின் இரத்தம்) என்ற இனவாதப் பரப்புரை தீவிரம் பெற்றுள்ள நிலையில், நுகேகொட பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளின் சுவர்கள், கதவுகளில், சிங்க லே என்று இனந்தெரியாத நபர்களால் எழுதப்பட்டுள்ளது.

ஜெனீவா தீர்மான விவகாரம்- சிறிலங்கா வந்த ஐ.நா சட்டத்துறைக் குழு

ஜெனீவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பான நிலைமைகளை ஆராய்வதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சட்டத்துறை சார் குழுவொன்று கடந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணிகள் ஒப்படைப்பு, மீள்குடியேற்றம் குறித்து ஆராய பொங்கல் நாளன்று பலாலியில் முக்கிய கூட்டம்

யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்வது மற்றும், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை மீளக்கையளிப்பது குறித்து ஆராயும் முக்கியகூட்டம், எதிர்வரும் தைப்பொங்கல் நாளன்று பலாலிப் படைத்தளத்தில் சிறிலங்கா அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

போர் விமானக் கொள்வனவு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – சிறிலங்கா விமானப்படை

சிறிலங்கா விமானப்படைக்கு போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பான எந்த முடிவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று சிறிலங்கா விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதகால பதவிநீடிப்புக் கேட்கிறது பரணகம ஆணைக்குழு

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும், அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடையவுள்ள நிலையில், மேலும் ஆறு மாதகால பதவி நீடிப்பைக் கோரவுள்ளது.

செல்வம் அடைக்கலநாதனுக்கு மாரடைப்பு – சிறி ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, சிறிஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை சிறிலங்கவில் அறிமுகம்

சிறிலங்காவில் நேற்று தொடக்கம் 12 இலக்கங்களைக் கொண்ட தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருவதாக, ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.என்.ரத்நாயக்க தெரிவித்தார்.

நவாஸ் ஷெரீப் – மைத்திரி இடையே செவ்வாயன்று முக்கிய பேச்சு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மூன்று நாள் பயணமாக நாளை மறுநாள் திங்கட்கிழமை பிற்பகல் சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.