மேலும்

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மறைவுக்காக தேசிய துக்க நாள் இல்லை

ratnasiri-wickremanayakeசிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அறிவிக்கப்பட்டிருந்த தேசிய துக்க நாளை சிறிலங்கா அரசாங்கம் விலக்கிக் கொண்டுள்ளது.

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள வரும் 31ஆம் நாள் தேசிய துக்க நாளாக சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னர் அறிவிக்கப்பட்டது.

பின்னர், தேசிய துக்க நாள்  நாளை 30ஆம் நாள் அனுஷ்டிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது,

எனினும், ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளை அடுத்து, தேசிய துக்கநாள் அறிவிப்பை விலக்கிக் கொள்வதாக சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

எனினும், ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இறுதிச்சடங்கு முழு அரச மரியாதைகளும் இடம்பெறும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *