மேலும்

சிறிலங்காவின் இறைமையை மதிப்பதாக கூறுகிறது அமெரிக்கா

ஈரானிய போர்க்கப்பலான ஐஅர்ஐஎஸ் புஷேர் மற்றும் அதன் குழுவினர் தொடர்பான விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த முடிவுகளை எடுப்பதில், சிறிலங்காவின் இறையாண்மையை மதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானியக் கப்பல், அதன் 208 பணியாளர்கள் மற்றும் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் தொடர்பான இறுதி முடிவு, சிறிலங்காவின் உள்நாட்டு சட்டங்கள் மற்றும் அனைத்துலக சட்டக் கடப்பாடுகளுக்கு ஏற்ப சிறிலங்காவிடமே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளில், 22 பேர் கராப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, கொக்கல விமானப்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 10 பேரும் கராப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும், அவர்களில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *