சிறிலங்காவின் இறைமையை மதிப்பதாக கூறுகிறது அமெரிக்கா
ஈரானிய போர்க்கப்பலான ஐஅர்ஐஎஸ் புஷேர் மற்றும் அதன் குழுவினர் தொடர்பான விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த முடிவுகளை எடுப்பதில், சிறிலங்காவின் இறையாண்மையை மதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானிய போர்க்கப்பலான ஐஅர்ஐஎஸ் புஷேர் மற்றும் அதன் குழுவினர் தொடர்பான விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த முடிவுகளை எடுப்பதில், சிறிலங்காவின் இறையாண்மையை மதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் ஐஆர்ஐஎஸ் டேனா மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறிலங்கா மற்றும் ஈரானிய இராஜதந்திரிகள் முறையான கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளன.